அகதியின் முதற் களவு

கதிர் அறுந்து நிகழ் சிதறும் இரவொன்று

காதற்சொல் இழக்கமுதற் கைக்கும்

பார்ப்பது பசப்புவதென்ற கசப்பற்ற மொழி

வெறும் கட்டுக்கதை

உயிர் செருகும் எந்தக் கிறுக்கலும் சுட்டெரிக்கும்

நேசம் பாரம்கூடி சவம் சேரும்

உண்மை அழிந்து melt உம்.

புதிர் குளிரும் பிறர்வாயால் பேயலறும்

திமிர் செய்யும் குழப்படியில் பொய் கழரும்

காசு குடுத்த என் ஆவி மசியாது.

ஏத்து ஏத்து எப்படியாயினும் ஏத்து என

ஏத்திக்கொண்டிருக்கும் ஏஜென்சிக்கு அலுப்புத்தரும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *